நன்றி செலுத்துவாயே


நன்றி செலுத்துவாயே

28. (12 L.) தன்யாசி                        ஆதி தாளம்

பல்லவி

                        நன்றி செலுத்துவாயே-என் மனமே நீ
                        நன்றி செலுத்துவாயே.
  
சரணங்கள்
1.         அன்றதம் செய்தபாவம் பொன்று நிமித்தமாக
            இன்றவதாரம்செய்த இயேசுவுக்கே - நன்றி

2.         தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
            ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே - நன்றி

3.         அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
            துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே. - நன்றி

4.         வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா
            சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே. - நன்றி

5.         உன்னதத்தேவனார் தமக்கே மகிமையுடன்
            இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக. - நன்றி

6.         ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
            ஆசீர்வதிப்பதாலே அருமையாக. - நன்றி 
- ஆ. தேவதாசன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு