தேவ சுதன் பூவுலகோர்


தேவசுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க

40. (87) காம்போதி                                        திஸ்ர ஏகதாளம்

அந்தாதி 
1.       தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க-மனு
          ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார்.

2.         வந்த பின் தன் தந்தையர்க் குகந்தபடியே-பர
            மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார்.

3.         தொண்டனாகி, அண்டர் கோமான்[1] விண்ட[2] மறையே,-பரி
            சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே.

4.         புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே-பல
            போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார்.

5.         பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள்-அற்
            புதங்கள் செய்துசிதங்கள்[3] ஓதிக் கதங்களை[4] வென்றார்.

- தேவ வரம்




[1]. வானவர் அரசன்
[2]. உரைத்த
[3]. சிறந்தவை
[4]. பாம்புகளை 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு