இரட்சகரொருவர் அன்பு


410. S.A.

"When Jesus was born in the Manger"

1.         இரட்சகரொருவர் அன்பு,
            பேரன்பென்று கேள்விப்பட்டேன்,
            ஆனால் மெய்தானா மோட்சம்விட்டு
            என்னை மீட்க மனிதனானார்?

            ஆம்! ஆம்! ஆம்!
            என்னை நேசித்ததாலே தானே;
            ஆம்! ஆம்! ஆம்!
            என் மேல் க்ருபை கூறுகிறார்.

2.         அவர் பாடும் அனுபவமும்
            அதிகமாய்க் கேள்விப்பட்டேன்!
            ஆனால் மெய்தானா யிவை எல்லாம்
            பாவி எந்தனுக்காகத்தான்?

3.         மகா யேசுவினடியார்க்கு
            மேல் வீடொன்றிருக்கிறதாம்;
            ஆனா லேழைப்பாவி எனக்கு
            அங்கோர் பங்கு இருக்கிறதா?

4.         தேவே! இந்த என் விண்ணப்பத்தை
            அன்பாக நீர் ஏற்றுக்கொண்டு,
            உமதாவியா லிவை யெல்லாம்
            என் பங்கென்று காட்டிடுவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு