எந்நேரமேயும் பாடுவேன்


388. S.S.218

"I feel like singing"

1.         எந்நேரமேயும் பாடுவேன்;
                   விசாரம் நீங்கிற்றே,
            இம்மனுவேலைப் போற்றுவேன்
                        சந்தோஷமாயிற்றே.

                        சங்கீதம், கீதம், கீதம் பாடுவேன்
                        கீதம், கீதம், சங்கீதம் பாடுவேன்.

2.         என் பாவ பலி யேசுவைக்
                        கல்வாரியிற் கண்டேன்,
            அத்தாலுண்டான துக்கத்தை
                        விட்டாறித் தேறினேன்.

3.         பொல்லாத சோதனை உண்டே,
                        என்றாலும் வெல்லுவேன்
            என் வல்ல கர்த்தர் யேசுவே;
                        நான் நித்தம் பாடுவேன்.

4.         பேரன்பின் சுவிசேஷத்தை
                        எல்லோருக்குந் தெரிவி,
            இப்பூமியெங்கும் வேதத்தைப்
                        பிரஸ்தாபித் தறிவி.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு