கர்த்தாவே பரஞ்சோதியால்


416. St. Lawrence                                                                 L.M.

"O Thou who makest souls to shine"

1.          கர்த்தாவே, பரஞ்சோதியால்
            ஆன்மாவைப் ப்ரகாசிப்பிப்பீர்;
            சீர் அருள் என்னும் பனியால்
            உம் அன்பாய்வோரை உய்விப்பீர்.

2.         உம் மந்தை சுத்தமாகவும்,
            விளக்கெல்லாம் இலங்கவும்
            போதகர் சபையாருக்கும்
            வரப்ரசாதம் அருளும்.

3.         விண் ஆள் தாம் முதல் ஆகியே,
            மற்றோரை ஆங்குயர்த்தவும்,
            விஸ்வாசம், நம்பிக்கை, அன்பே
            ப்ரசங்கிப்போருக்கு ஈந்திடும்.

4.         எவ்வேழையான பேர்களும்
            மேலான ராஜ்யம் சேரவே,
            கேட்போருக்குக் கற்க விருப்பம்,
            சற்குணம், சாந்தம் நல்குமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு