துக்கம் திகில் இருள் சூழ


353. St. Oswald, Sussex 

Marching.                                        8, 7, 8, 7.

"Through the night of doubt and sorrow"

1.         துக்கம் திகில் இருள் சூழ,
                        மோட்ச யாத்திரை செய்கிறோம்;
            கீதம் பாடி முன்னே நோக்கி
                        மோட்ச பாதை செல்கிறோம்.

2.         இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும்
                        தீப ஸ்தம்ப ஜோதியும்;
            வீரமாக ஐக்கியமாக
                        முன்னே செல்வோம் ராவிலும்.

3.         பக்தரோடு தங்கிச் செல்லும்
                        தெய்வமாம் ஒளி ஒன்றே;
            இருள் நீங்க அச்சம் நீங்கும்,
                        பாதை முற்றும் பகலே.

4.         எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே,
                        குன்றா விசுவாசமும்;
            எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே,
                        ஒன்றே எம் நம்பிக்கையும்.

5.         மோட்சம் செல்லும் கோடிப்பேரும்
                        பாடும் பாட்டு ஒன்றேயாம்;
            ஆபத்து, போராட்டம், தெய்வப்
                        பாதை செல்வதும் ஒன்றாம்.

6.         மோட்ச கரை சேர்ந்தபின்னும்
                        பூரிப்பானந்தம் ஒன்றே;
            ஒரே சர்வ வல்ல பிதா
                        அன்பால் அரசாள்வாரே.

7.         முன்னே செல்வீர், தோழரே நீர்,
                        சிலுவை உம் பலமாம்;
            நிந்தை தாங்கி போர் புரிவீர்
                        ஆயுள் காலமும் எல்லாம்.

8.         நியாயத்தீர்ப்பு மா தினத்தில்
                        கல்லறை விட்டெழுவோம்;
            துக்கம் திகில் யாவும் நீங்கும்,
                        பாடும் ராவும் ஓய்ந்துபோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு