கெட்டோனை ரட்சியும்


400. S.S.814

"Rescue the perishing"

1.         கெட்டோனை ரட்சியும்;
                      சாவோனைக் காரும்
            பாவமும் சாபமும்
                        நீங்கச் செய்யும்
            சோர்வோனைத் தாங்கிடும்
                        வீழ்ந்தோனைத் தாங்கிடும்
            சுப விசேஷத்தை அறிவியும்.

            கெட்டோனை ரட்சியும்,
            சாவோனைக் காரும்!
            யேசு தயாபரர்,
            யேசு வல்லோர்.

2.         தீக்குணம் நெஞ்சிலே
                        மங்கிப்போனாலும்
            மோட்சத்தை நாடும்
                        நல்லாசையுண்டாம்;
            அன்பின் விசேஷத்தால்,
                        சத்தியத்தாலும்
            குன்றிய வாஞ்சையும்
                        மேலிடுமாம்.

3.         கெட்டோனை ரட்சியும்,
                        ஆத்திரத்தோடு,
            ஆவியின் வல்லமை அருளுவார்;
                        ரட்சிப்பைக் கூறவும்
            உருக்கத்தோடு
                        தேவாசீர்வாதமும்
            தந்திடுவார்.    

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு