சீர்பெறாமல் திக்கில்லாமல்


404. S.S. 481

"Lone and weary, sad and dreary"

1.         சீர்பெறாமல்; திக்கில்லாமல்,
            யேசுவண்டை சேருவேன்,
            ஆவலோடும் ஆசையோடும்
            திருப்பாதம் அண்டுவேன்.

                        அண்டினேனே! அண்டினேனே!
                        ஆசீர்வாதம் தாருமேன்,
                        அண்டினேனே அண்டினேனே
                        ஆற்றித் தேற்றிக் காருமேன்

2.         தயவாக - நேசமாக
            சீரைத் தந்து ரட்சிப்பீர்,
            பாவத் தீங்கும் தூர நீங்கும்,
            சர்வ சுத்தியாக்குவீர்.

3.         குணம் மாற - நெஞ்சம் ஆற
            பரவசமாகுவேன்;
            கரையேற, மோட்சஞ் சேர,
            ஊழிகாலம் வாழுவேன்.

4.         அருள்தாரும் - பாதுகாரும்
            மறு மாசில்லாமலே,
            வாழ்விலேயும் தாழ்விலேயும்
            தாங்கிவாரும் நாயனே!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு