03 November 2018

பாவம் தீராததென்ன


393. S.S.351

"Why do you wait dear brother"

1.         பாவம் தீராததென்ன?
                      ஓ! தாமதம் பண்ணுவானேன்?
            தயாபரர் நித்திய ஜீவன்
                        ஈவாரே, சந்தேகிப்பானேன்?

                        வாவேன்! வாவேன்!
                        வாவேன்! இக்ஷணமே!

2.         உணர்வில்லாத தென்ன?
                        பயங்கர மோசமுண்டாம்
            இயேசுவினாலே யல்லாமல்
                        விமோசனமே யில்லையாம்.

3.         குணப்படாத தென்ன?
                        ரட்சண்ய நல் நாளிதுவே!
            ராக்காலம் சமீபித்துவர
                        மா மோசமும் சாவுமுண்டே.

4.         சுத்தமில்லாத தென்ன?
                        மா திவ்ய ஸ்நானமுண்டே
            உம் பாவம் நிவாரணமாகும்
                        சமூலம் இந்நேரத்திலே.

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...