பாவிக் கவர் காட்டின மா நேசத்தால்


391. He has pardoned a rebel

1.         பாவிக் கவர் காட்டின மா நேசத்தால்,
            சிலுவையில் தொங்கின யேசு,
            திரு சிரசிலவர் மண்முடியைச் சூண்டார்,
            பெரும்பாவி என்னை இரட்சிக்க.

                        பெரும்பாவி என்னை இரட்சிக்க,
                        திரு சிரசிலவர் முண்முடியைச் சூண்டார்
                        பெரும் பாவி என்னை இரட்சிக்க.

2.         ஓர் காலமவர் ஏழைப் பாவிக்காகச்
            சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்;
            “தாகமுள்ள எல்லாரும் வாரும் நானே”
            என்றார், “இளைப்பாற்றும் ஜீவ தண்ணீர்”.

3.         உமதற்புத மா நேசம் பாவி எந்தன்
            கல் இருதயத்தை இளக்கி,
            மனஸ்தாபத்தோடு சுவாமி நான் உன்தன்
            திருப்பாதத்தைத் தேடி வந்தேன்.

4.         எப்பேர்க்கொத்த பாவியையும் ரட்சிக்க
            ஆம் வல்லவர் எனது மீட்பர்;
            உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னை
            இவர் சத்தியமாக மீட்பார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு