பார் முன்னணை ஒன்றில்


429. Cradle Song                                                       11, 11, 11, 11.

"Away in a Manger"

1.         பார், முன்னணை ஒன்றில் 
                   தொட்டில் இன்றியே
            பாலனாம் நம் 
                        இயேசு கிடந்தனரே
            வெளியில் புல்மீது 
                        தூங்கும் பாலன்தாம்
            காண மின்னிட்டதே வான் வெள்ளிகள் தாம்.

2.         மா, மா, எனும் சத்தம் 
                        கேட்டு விழிப்பார்,
            ஆயின் பாலன் இயேசு 
                        அழவே மாட்டார்;
            நான் நேசிக்கும் நாதா,
                        நீர் நோக்கிப் பார்ப்பீர்,
            தூக்கத்தில் நீர் தங்கி
                        ராவெல்லாம் காப்பீர்.

3.         என் நாதா, என்றும்
                        நீர் என்னை நேசிப்பீர்,
            என்னோடு தரித்தே
                        அன்பாய் அணைப்பீர்;
            உம் பாலர்தம்மை 
                        நீர் ஆசீர்வதித்தே
            சேர்த்திடும் விண் வீட்டில்
                        தூயோராக்கியே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு