தயாபரா கண்ணோக்குமேன்


402. S.S.476

"Jesus my Lord to Thee I cry"

1.         தயாபரா! கண்ணோக்குமேன்!
            உம்மாலேயன்றி சாகுவேன்,
            என் சீரில்லாமை பாருமேன்!

                        என் பாவம் நீக்குமே!
                        என் பாவம் நீக்குமே!
                        என் பாவம் நீக்குமே!
                        உம் ரத்தமே என் கதியே!
                        என் பாவம் நீக்குமே!

2.         என் பாவ ஸ்திதி அறிவீர்,
            மாசற்ற ரத்தஞ் சிந்தினீர்,
            சீர்கேட்டை யெல்லாம் மாற்றுவீர்
            என் பாவம் நீக்குமே!

3.         மெய்ப்பக்தி ஒன்றுமில்லையே!
            நற்க்ரியை வீண் பிரயாசையே,
            உம் ரத்தத்தின் நிமித்தமே
            என் பாவம் நீக்குமே!

4.         இதோ! நற்பாத மண்டினேன்
            தள்ளாமற் சேர்த்துக் கொள்ளுமே
            என்றைக்கும் பாதுகாருமேன்,
            என்பாவம் நீக்குமே!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு