ஆயுததாரி நான்


423. S.S.696

"Only an armour-bearer."

1.         ஆயுததாரி நான்,
                   அபாத்திரனே
            சேனாபதிக்கோ
                        பின் செல்வேனே,
            நில், செல் என்றவர்
                        சொல்லக் கேட்கவும்,
            யேசுவின் நல்வாக்கை
                        நம்பி வெல்லவும்.

                        பேரொலி கேட்குதே!
                                    ஜெயமுண்டாம்!
                        போராடுவோம்
                                    முனை முகமெல்லாம்.
                        சேனாதிபதி என்னை
                                    நோக்குவார்;
                        ஆயுததாரியையும்
                                    நம்புவார்.

2.         ஆயுததாரி நான்,
                        இந்நேரத்தினில்
            சன்னத்தனாகப்
                        படை முகத்தில்
            போர்க்களத்தில் தாரவாரங்
                        கேட்கவே
            பயமில்லாமல் யுத்தஞ்
                        செய்வேனே.

3.         ஆயுததாரி நான்,
                        அசக்தனுமாய்க்
            காணப்பட்டாலும்,
                        வெற்றி வேந்தனாய்
            நித்திய காலமும்
                        மிக வாழுவேன்,
            முக்தி மோட்ச வீட்டில்
                        நிலைத்திருப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு