யோர்தான் விட்டேறி மனுஷ


417. Irish                                                                   C.M.

"The Son of Man from Jordan rose"

1.         யோர்தான் விட்டேறி, மனுஷ
            குமாரன் ஜெபித்தார்;
            வானின்றப் போதிறங்கின
            புறா உருக் கண்டார்.

2.         நல்லாவி அபிஷேகமாய்
            அவர் மேல் தங்கினார்;
            என் நேச மைந்தன் என்பதாய்
            பிதா விளம்பினார்.

3.         அவ்வாறு ஸ்நானத்தால் புது
            பிறப்பை அடைந்தார்,
            மெய்த் தெய்வ புத்திரர் என்று
            விஸ்வாசத்தால் காண்பார்.

4.         கபடில்லாப் புறாத்தன்மை
            தரிக்கப்படுவார்
            நல்லாவித் தங்கள் உள்ளத்தை
            நடத்தப் பெறுவார்.

5.         உம் ரத்த ஊற்றால் பாவத்தை
            நீக்கின கிறிஸ்துவே,
            தூய்மையோரான தாசரை
            தற்காத்துக் கொள்ளுமே.

6.         சீர் கெட்டலோகம் மீட்டோரே,
            பிதா ஆவியையும்
            உம்மோடு ஏகராகவே
            என்றென்றும் துதிப்போம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு