பூவின் நற்கந்தம் வீசும்


389. S.S.529

"Down in the valley with my saviour"

1.         பூவின் நற்கந்தம் வீசும்
                        சோலையாயினும்
            நல்ல தண்ணீர் ஓடும்
                        பள்ளத் தாக்கிலேயும்,
            இயேசு நாதர் பின்சென்றேகி
                        மோட்சம் நாடுவேன்,
            விண்ணில் சூடும் க்ரீடம்
                        நோக்கி ஓடுவேன்.

            பின் செல்வேனே!
                        மீட்பர் பின்செல்வேனே!
            எங்கேயும் எப்போதும்
                        பின்னே செல்லுவேன்.
            பின் செல்வேனே!
                        மீட்பர் பின் செல்வேனே
            இயேசு காட்டும் பாதை
                        யெல்லாம் செல்லுவேன்.

2.         கார்மேகம் மேலே மூடும்
                        பள்ள மென்கிலும்
            காற்றகோரமாக மோதும்
                        ஸ்தானத்திலும்
            யேசு பாதை காட்டச் சற்றும்
                        அஞ்சவே மாட்டேன்;
            இரட்சகர்கை தாங்கத்
                        தைரியம் கொள்ளுவேன்.

3.         நாள்தோறும்யேசுநாதர்
                        கிட்டிச் சேருவேன்;
            மேடானாலும் காடானாலும்
                        பின் செல்லுவேன்,
            மீட்பர் என்னை மோசமின்றிச்
                        சுகமே காப்பார்;
            விண்ணில் தாசரோடு
                        சேர்ந்து வாழ்விப்பார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு