வான பிதா தந்த வேதத்திலே


397. S.S.38

"God's love"

1.        வான பிதா தந்த வேதத்திலே
          நான் மகிழ்வேன்
                        அன்பு சொல்லுகிறார்;
            இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே
            ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்.

                        ஆனந்தம் யேசு நேசிக்கிறார்
                        நேசிக்கிறார், நேசிக்கிறார்
                        ஆனந்தம்! இயேசு நேசிக்கிறார்,
                        நேசிக்கிறார் என்னையும்.

2.         நான் மறந்தேடினும் நேசித்தென்னை
            சென்ற இடம் வந்து தேடுகிறார்;
            மீண்டும் நினைத்தவர் நேசந்தன்னை
            ஆண்டவர் அண்டுவேன், நேசிக்கிறார்.

3.         நேசிக்கிறார், நானும் நேசிக்கிறேன்
            மீட்கவந் தாத்துமம் நேசிக்கிறார்;
            சாவுமரத்தில் அந்நேசங்கண்டேன்
            நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்.

4.         நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்
            நம்பும் என்யேசென்னை வாழ்விக்கிறார்
            சாத்தான் நில்லாதஞ்சி ஓடக்கண்டேன்
            நான் சொல்ல, யேசென்னை நேசிக்கிறார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு