27 June 2018

திருக்கரத்தால் தாங்கி என்னை


          திருக்கரத்தால் தாங்கி என்னை
            திருச்சித்தம் போல் நடத்திடுமே
            குயவன் கையில் களிமண் நான்
            அனுதினமும் வனைந்திடுமே

1.         உம் வசனம் தியானிக்கையில்
            இதயமதில் ஆறுதலே
            காரிருளில் நடக்கையிலே
            தீபமாக வழி நடத்தும் (2)

2.         ஆழ் கடலில் அலைகளினால்
            அசையும்போது என் படகில்
            ஆத்ம நண்பர் இயேசு உண்டே
            சேர்ந்திடுவேன் அவர் சமூகம் (2)

3.         அவர் நமக்காய் ஜீவன் தந்து
            அளித்தனரே பெரிய மீட்பு
            கண்களினால் காண்கிறேனே
            இன்பக் கானான் தேசமதை (2)

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...