பல்லவி
ஆச்சரியமே!
அதிசயமே
ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தனிடம்
சரணங்கள்
1. செங்கடல் இரண்டாய்ப் பிரிந்து போக
சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே - ஆச்சரியமே
2. ஏழு மடங்கு எரி நெருப்பில்
ஏழை தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச் சிங்கக் கெபியில்
தூதன் துணையால் காத்தனரே - ஆச்சரியமே
3. பனி மழையை நிறுத்தினாரே
பக்தன் எலியா தன் வாக்கிலே
யோசுவாவின் வார்த்தையாலே
யேகும் சூரியன் நின்றதுவே - ஆச்சரியமே
4. மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
மாபெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல் எறிந்தே - ஆச்சரியமே
5. நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி நம்மை ஆதரிப்பார் - ஆச்சரியமே
- சாராள்
நவரோஜி
No comments:
Post a Comment