ஆச்சரியமே! அதிசயமே
பல்லவி
ஆச்சரியமே!
அதிசயமே
ஆண்டவர்
செயல்கள் ஆதி பக்தனிடம்
சரணங்கள்
1. செங்கடல்
இரண்டாய்ப் பிரிந்து போக
சொந்த
ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின்
துதிகளாலே
ஈன
எரிகோ வீழ்ந்ததுவே -
ஆச்சரியமே
2. ஏழு
மடங்கு எரி நெருப்பில்
ஏழை
தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச்
சிங்கக் கெபியில்
தூதன்
துணையால் காத்தனரே -
ஆச்சரியமே
3. பனி
மழையை நிறுத்தினாரே
பக்தன்
எலியா தன் வாக்கிலே
யோசுவாவின்
வார்த்தையாலே
யேகும்
சூரியன் நின்றதுவே -
ஆச்சரியமே
4. மதிலைத்
தாண்டி சேனைக்குள் பாயும்
மாபெலன்
தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே
கோலியாத்தை
வீரன்
தாவீது கல் எறிந்தே -
ஆச்சரியமே
5. நம்
முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும்
இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை
நோக்கி வேண்டும் போது
தாங்கி
நம்மை ஆதரிப்பார் -
ஆச்சரியமே
Comments
Post a Comment