பல்லவி
உம்
இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே
சரணங்கள்
1. பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை - உம் இரத்தமே
2. நீ நேசச் சிலுவை சத்தியம்
நாசமடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம் - உம் இரத்தமே
3. நின் சிலுவையில் சிந்தின
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தைப் பரிகரித்தீர்
அன்புள்ள தேவபுத்திரா - உம் இரத்தமே
4. பன்றிபோல் சேறில் புரண்டேன்
நன்றியில்லாமலே திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர் - உம் இரத்தமே
5. விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழுங்காமல் போக்கினானே
களங்கமில்லாக் கர்த்தரே - உம் இரத்தமே
6. ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா - உம் இரத்தமே
No comments:
Post a Comment