உன் நாட்கள் எல்லாம் வீணானதா

உன் நாட்கள் எல்லாம் வீணானதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          உன் நாட்கள் எல்லாம் வீணானதா?

            முயற்சி எல்லாம் பாழானதா?

            ஒன்றுக்கும் உதவாகாதவன் என்று

            உன் நம்பிக்கையை இழந்திட்டாயா?

            போராட பெலன் இல்லை என்றாலும்

            விட்டுவிடு என்று உலகம் சொன்னாலும்

            முடியாதென்று பட்டம் அடித்தாலும்

            முடியும் என்று இயேசு சொல்கிறார்

 

                        எழும்பி வா நீ - விட்டுக்கொடுக்காமல்

                        எழும்பி வா நீ - உயரே பறந்திட

                        எழும்பி வா நீ - வாழ்க்கை ஜெயித்திட

                        எழும்பி வா - நீ எழும்பி வா நீ

 

1.         மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்

            உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்

            கனவில் இல்லா மேலான வாழ்வை

            பூமியில் வாழ உதவி செய்வார்

            காத்திருந்த காலம் முடிந்தது

            காரியங்கள் மாறப் போகுது

            ஆச்சரியங்கள் கதவைத் தட்டுது

            ஆட்சி செய்யும் நேரம் வந்தது

 

                        எழும்பி வா நீ எழும்பி, வா நீ எழும்பி வா நீ

                        எழும்பி வா நீ,  எழும்பி வா நீ,

                        எழும்பி வா நீ - விட்டுக்கொடுக்காமல்

                        எழும்பி வா நீ - உயரே பறந்திட

                        எழும்பி வா நீ - வாழ்க்கை ஜெயித்திட

                        எழும்பி வா - நீ எழும்பி வா நீ

           

            எழும்பி வா நீ

            அச்சத்தை எதிர்கொண்டு

            அலைகள் போலவே உயர எழும்பிடு

            எழும்பி வா நீ

            தொடர்ந்து நடந்திடு

            புதிய வழிகளில் தொடர்ந்து ஓடிடு

            எழும்பி வா நீ

            சோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன்னால் நீ

            எழும்பி வா நீ

            சந்தகத்தையே விடு உன்னால் முடியும் என்று நம்பிடு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு