வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தேவனே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தேவனே

            பாதைகள் எல்லாம் நெய்யாய் பொழியும் தேவனே

 

                        வனாந்திர தாபரங்களில் பொழியுது

                        மேடுகள் பூரிப்பாக்குது

                        பள்ளத்தாக்கு தானியத்தால் நிறம்புது

                        என் உள்ளம் மகிழ்ந்து பாடுது

 

1.         உம்முடைய வீட்டில் வாசமாய் இருப்போர் பாக்கியவான்களே

            உன்னதரின் மறைவில் வல்லவரின் நிழலில் வாழ்ந்து சுகிப்பாரே

            கர்த்தர் எந்தன் மேய்ப்பர் தாழ்ச்சி என்றும் இல்லையே

            நன்மை கிருபை தொடரும் என் வாழ்நாள் எல்லாமே

 

2.         வனாந்தரம் வறண்ட நிலம் மகிழ்ந்து பாடும் எல்லா வறட்சி மாறுதே

            வருமை மாறும் எல்லா வளமும் பெருகும் வாதை நோயும் மறையுதே

            தண்ணீரையும் கடந்தோம் மூழ்கி போகவில்லையே

            அக்கினியில் நடந்தோம் எறிந்து போகவில்லையே

 

3.         கன்மலை வெடிப்பில் வைத்து கரத்தால் மூடி கண்மணி போல் காத்தீரே

            கால்கள் இடறாமல் கருணை வைத்து தூக்கி தோளில் சுமந்தீரே

            துதியின் ஆடை தந்து உம்மை துதிக்க வைத்தீரே

            சாக்கு ஆடை நீக்கி சந்தோஷம் தந்தீரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு