உன்னை காக்கிறவர் உறங்கார்

உன்னை காக்கிறவர் உறங்கார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   உன்னை காக்கிறவர் உறங்கார்

                        உன் காலைத் தள்ளாட வொட்டார்

                        கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்

                        கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் - 2

 

1.         மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்

            ஆழி போல் சோதனை பெருகினாலும்

            கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்

            நெஞ்சே நீ கலங்கிடாதே                      - உன்னை

 

2.         பாவமும் சாபமும் சூழ்ந்த போது

            பாவத்துக்காய் மனம் திரும்பும் போது

            பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்

            நெஞ்சே நீ கலங்கிடாதே                      - உன்னை

 

3.         சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து

            பட்டினியாகவும் இருக்கும்

            கர்த்தரை தேடுவோர்க்கு

            குறைவில்லை என்றதால்

            நெஞ்சே நீ கலங்கிடாதே                      - உன்னை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு