இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உன்னைத்
தேடி வந்த இயேசுக்கு
நீ
நன்றி சொல்லு
மகனே மகளே
நீ
நன்றி சொல்லி வாழ்ந்து
வந்தால்
நலம்
கிடைக்கும் வாழ்விலே
1. மண்ணின்
மீது பிறந்து வளர்ந்தாய்
பாவம்
என்னும் சேற்றில்
புரண்டாய்
உன்னை
மீட்கவே பல
பாடுகள் பட்டார்
உனக்காகவே
அவர் ஜீவன்
தந்தார்
2. உண்மையுள்ள
நெஞ்சம் உடையவர்
உறுதியாய்
உன்னை காப்பார்
வல்லமையில்
வாக்களித்த
அவர்
வசனத்தை நிறைவேற்றுவார்
3. நீதியென்னும்
செய்கோலுடையவர்
நிச்சயம்
நியாயம் தீர்ப்பார்
அந்த
நாட்களில் நீதப்பித்துக்கொள்ள
அண்டிடுவாய்
அவர் பாதத்தையே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment