பல்லவி
ஏலி
ஏலி லாமா சபத்தானி
சால மெஞ்ஞானி சர்வ நித்யானி
சரணங்கள்
1. நேச குமாரன் என்று சொன்னீரே
பாசமில்லையோ பரம செங்கோலா - ஏலி
2. மகனையும் மறக்க மனமும் வந்ததுவோ
ஜெகத் தோர்க்காய் வந்த நற்பலனிதுவோ - ஏலி
3. பாவிகள் படுத்தும் பாடுபோதாதோ
காவலர் நீரும் கைவிடலாமோ - ஏலி
4. பலர் படும் பாட்டை ஒருவர் சுமந்தால்
நிலைக்குமோ தேகம் நிமிஷத்து நேரம் - ஏலி
No comments:
Post a Comment