கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்


                   கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
                        கைகொட்டிப் பாடிடுவோம்
                        இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
                        ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ! ஆ!

1.         பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
            புரண்டுருண்டோடுதுபார் - அங்கு
            போட்ட முத்திரை காவல் நிற்குமோ
            தேவ புத்திரர் சந்நிதிமுன் - ஆ! ஆ!                - கீதம்

2.         வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
            ஓடி உரைத்திடவோ - தாம்
            கூறின மாமறை விட்டனர் கல்லறை
            போங்கள் கலிலேயாவுக்கு - ஆ! ஆ!                 - கீதம்

3.         அன்னா காய்பா ஆரியர் சங்கம்
            அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
            பூத கணங்கள் இடி ஒலி கண்டு
            பயந்து நடுங்குகின்றார் - ஆ! ஆ!                     - கீதம்

4.         வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
            வருகிறார் ஜெய வீரன் - நாமம்
            மேள வாத்தியம் கைமணி பூரிகை
            எடுத்து முழங்கிடுவோம் - ஆ! ஆ!                   - கீதம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு