27 July 2018

இயேசுவை நம்பி பற்றிக் கொண்டேன்


          இயேசுவை நம்பி பற்றிக் கொண்டேன்
            மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
            தேவ குமாரன் ரட்சை செய்தார்
            பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்.

                        இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
                        நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
                        மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
                        நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன்.

2.         அன்பு பாராட்டிக் காப்பவராம்
            எந்தனைத் தாங்கிப் பூரணமாய்
            இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
            இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

3.         மெய்ச் சமாதானம் ரம்மியமும்
            தூய தேவாவி வல்லமையும்
            புண்ணிய நாதர் தந்து விட்டார்
            விண்ணிலும் சேர்த்து வாழச் செய்வார்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...