பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா


                   பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா

அனுபல்லவி

                        பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று

1.         வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து
            அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை         - பந்தி

2.         பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து
            சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே                            - பந்தி

3.         கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார்
            கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார்                                  - பந்தி

4.         நானுன்னை கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே
            என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன்        - பந்தி

5.         மெய்யாகவே மெய்யாகவே உங்களிலொருவன்
            என்னைக் காட்டி கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்       - பந்தி

6.         பன்னிரு சீடர்களும் நானோ நானோ வென்றார்
            காட்டிக்கொடுக்கும் யூதாசும் நானோ ரபி என்றான்                    - பந்தி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு