அலையமலையாய் அலையினூடே


                   அலையமலையாய் அலையினூடே
                        அல்லேலூயா பாடிடவா

சரணங்கள்

1.         அலைகடலில் மீன் பிடிப்போரே - நீ
            வலை கிழிய மீன் பிடிக்க வா
            கலைகளெல்லாம் கைவிட்டதோ உன்
            வலையை வலப்புறமே வீசவா                - அலை

2.         அலைகடலைக் கடந்து சென்றோரே - நீ
            வலைகளிலே சிக்கி விட்டாயோ
            மலைதனிலே சிலுவையண்டை - பார்
            விலைமதியா விடுதலையுண்டே           - அலை

3.         பல வழிகள் பார்த்து நிற்கும் நீ - பார்
            மலைகளிலே மாளும் மாந்தரை
            அலையலையாய் மாந்தர் செல்கின்றார் - உன்
            வலையுடனே வேகமாக வா                   - அலை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு