ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே


                   ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
                        என் ஏசு குருசை சுமந்தே
                        என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே              - ஏறு

1.         கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
            சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
            அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
            ஆண்டவரை அனுப்புகிறான்                            - ஏறு

2.         மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
            நெஞ்சை பிளந்தான் ஆ கொடுமை
            இரத்தமும் நீரும் ஓடி வருதே
            இரட்சகரை நோக்கியே பார்                              - ஏறு

3.         இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
            சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
            நேசிக்கின்றாயோ யேசு நாதரை
            நேசித்து வா குருசெடுத்தே                              - ஏறு

4.         சேவல் கூவிடும் மூன்றுவேளையும்
            சொந்த குருவை மறுதலித்தான்
            ஓடி ஒளியும் பேதுரூவையும்
            தேடி அன்பாய் நோக்குகின்றார்                         - ஏறு

5.         பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
            பின்பற்றி வா சிலுவை வரை
            காடியைப் போல கசந்திருக்கும்
            கஷ்டங்களை அவரிடம் சொல்                        - ஏறு

6.         செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
            சொந்த தாயின் அன்பதுவே
            எருசலேமே! எருசலேமே
            என்றழுதார் கண்கலங்க                                    - ஏறு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு