உம்மை நம்பி உந்தன் பாதம்


                   உம்மை நம்பி உந்தன் பாதம்
                        உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
                        ஒருபோதும் கைவிடமாட்டீர் (2)

1.         கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து
            காலமெல்லாம் காத்துக் கொண்டீர்                    - என்னை

2.         குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள்
            முடவர்கள் நடந்தார்கள் - ஐயா

3.         மகனாக மகளாக அப்பா என்றழைக்கும்
            உரிமையை எனக்குத் தந்தீர் - ஐயா

4.         அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை
            அடிமைக்குத் தந்தீரே - ஐயா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு