தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு


                        தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
                        சேனையின் கர்த்தர் உன் நடுவில்
                        பெரிய காரியம் செயதிடுவார்

சரணங்கள்

1.         பெலத்தினாலும் அல்லவே
            பராக்கிரமும் அல்லவே
            ஆவியினாலே ஆகும் என்று
            ஆண்டவர் வாக்கு அருளினாரே           - தேசமே        

2.         கசந்த மாறா மதுரமாகும்
            கொடிய யோர்தான் அகன்றிடும்
            நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
            ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்        - தேசமே

3.         கிறிஸ்து இயேசு சிந்தையில்
            நிலைத்து என்றும் ஜீவிப்பாய்
            ஆவியின் பெலத்தால் அநுதினம் நிறைந்து
            உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்       - தேசமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு