09 July 2018

கர்த்தர் என்னை விசாரிப்பவர்


                   கர்த்தர் என்னை விசாரிப்பவர்
                        கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
                        கர்த்தர் என்னை உயர்த்துபவர்
                        கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்

1.         பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
            அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
            எந்தன் கவலை பாரத்தை முற்றும்
            அவர் மீது வைத்திடுவேன் நான்

2.         எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம்
            உன்னதரே எண்ணி வைத்துள்ளார்
            அவரின் உத்தரவில்லா தொன்றும்
            கீழே விழாது என்று அறிவேன் நான்

3.         தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
            மனிதன் எனக்கு என்னதான் செய்வான்
            எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
            அவரின் கணக்கில் வைத்துள்ளாரல்லோ

4.         வலது கரத்தைப் பிடித்து என்னையும்
            உனது துணை நான் என்று சொல்லி
            வழக்காடுவோர் அனைவரையுமே
            வெட்கப்பட்டு போக செய்வாரே

5.         தேவன் தமது ஐசுவரியத்தினால்
            எந்தன் குறைகளை எல்லாமே
            கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
            நிறைவாக்குவாரே கவலை ஏன்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...