மலரெடுத்து பூ முடித்து

மலரெடுத்து பூ முடித்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

477. இராகம்: பிலகரி.                                                                    தாளம்: ரூபகம்.

 

                             பல்லவி

 

                        மலரெடுத்துப் பூ முடித்து

                        மண மக்கள் மேல் சொரிவோம், தங்காய்!

 

                             அனுபல்லவி

 

                        குணமகள் மாது மங்கை குலுங்க

                        கொன்னைப்பூ, தென்னைக்பூ, கன்னிப்பூ நன்னிப்பூ

 

                             சரணங்கள்

 

1.         காலா கால மாயிவரை, கண்மணிபோல் பாது காத்து - 2

            ஞால மதில் வாழ்ந்தி ருக்க - 2

            ஆலம்பூ வேலம்பூ ஞாலம்பூ, ஏலம்பூ - 2 - மலரெடுத்து

 

2.         நித்தியசீ வவழியில், பக்தியுடன் னேநடந்து - 2

            எத்தருண முங்களிக்க - 2

            அத்திப்பூ, அகத்திப்பூ, துத்திப்பூ, பிச்சிப்பூ - 2 - மலரெடுத்து

 

3.         இந்த மணப் பந்தலிலே, சந்ததமும் வாழ்ந்திருக்க - 2

            விந்தையுடன் ணங் களிக்க - 2

            வேந்திப்பூ, கேந்திப்பூ, சேந்திப்பூ, சிவந்திப்பூ - 2 - மலரெடுத்து

 

4.         வேதம்வி ளம்புமலரில் விண்மலர் தான்பொறுக்கி - 2

            ஆதரவில் வாழ்ந்தி ருக்க - 2

            தாளம்பூ, மல்லிப்பூ, ரோசாப்பூ, மகிழம்பூ - 2 - மலரெடுத்து

 

5.         அம்பரத்தில் வாழ்ந்திருக்க, அமலனார் கிருபையுடன் - 2

            அனவ ரதம் சுகித் திருக்க - 2

            ஆளன்பு, மெய்யன்பு, வேதன்பு, இயேசன்பு - 2 - மலரெடுத்து

 

6.         மணவாளன் ................... மணவாட்டி ..................... - 2

            குணமுடனே வாழ்ந்திருக்க - 2

            கற்புப்பூ, தாழ்மைப்பூ, அன்புப்பூ, இன்பப்பூ - 2 - மலரெடுத்து

 

 

 

1.         சந்ததமும் வாழ்த்திருக்க இந்த மணப் பந்தலிலே - 2

            விந்தையாக வாழ்ந்திருக்க - 2

            வேந்திப்பூ சேந்திப்பூ காந்திப்பூ லாந்திப்பூ - மலரெடுத்து

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே