205. இராகம் (ஏசுநாதனைத் துதிசெய்)
பல்லவி
தசம
பாகங்களை நமக்குத் தா தா தா தா தா
1. அசதியும் தளர்ச்சியும் வேண்டாமதிலே
அனைத்தையும் தந்த கடவுளார் நாமே
நிசமுனை யாசீர்வதிப்போம் பக்தா
நீ நீ நீ, நீ நீ -
தசம
2. ஆத்தும சரீரசுக மெதினாலே
ஆயுள் மக்கள் சுகமெதினாலே
தோத்திரக்காணிக்கை நமக்கேதுமிலையோ
சொல் சொல் சொல், சொல் சொல் - தசம
3. மனிதரை வஞ்சிக்கும் வண்ணம் நமையும்
வஞ்சிக்கப்போமோ வேண்டா மறிவாய்
தினமுதல் விளைவாய் நமது கடமை
செய் செய் செய், செய் செய் - தசம
4. வானமும் புவியும் மாரியும் எனதுன்
வாழ்வுக்குத் தக்க காணிக்கையுடனே
நீர் நமதாலயமதனுள் வந்தீர்
நில் நில் நில், நில் நில் - தசம
5. பிள்ளைகளாரால் பிழைத்தது பெற்றோம்
பிழைத்தனர் யாரால் விபத்துகளின்றி
எள்ளளவுமிதை நினையா திருப்பது
ஏன் ஏன் ஏன், ஏன் ஏன் - தசம
6. ஆக நம் வீட்டில் தசம பாகம்
ஆகாரமாக சேர்த்து வைப்பாக
வாகுடனுந்தன் மனதுடன்கொண்டு
வா வா வா, வா வா - தசம
7. அப்போ வானபலகணி திறந்து
அளவில் லாசீர் வாதங்கள் பொழிவோம்
செப்பாய் நமக்குத் தோத்திரம் சொல்லி
தின் தின் தின், தின் தின் - தசம
8. வருஷிக்க மாட்டேனோ ஆசீர்வாதம்
பட்டளவில்லா வகையாயுனக்கு
பரீட்சித்தென்னை சோதித்தறிந்து
பார் பார் பார், பார் பார் - தசம
No comments:
Post a Comment