07 June 2018

ஆத்தும நேசர் ஆவலாய் ஓடி

கைப்பிரதி:280

To Download Txt Lyrics file

 

280. சங்கராபரணம்                                                               ஆதி தாளம் (238)

 

1.       ஆத்தும நேசர் ஆவலாய் ஓடி

          அலைகிறார் உனைத்தேடி - என் மானே

            அண்டைவராயோ தொண்டு செய்யாயோ

            அகல நிற்பதேன் மானே

 

2.         தண்ணீர்க்குப்போன சமாரியப்பெண்ணைத்

            தவனமுடனே நாடி - என் மானே

            சந்தித்தவரிதோ வந்தழைத்தால் வர

            தாமதமுனக்கேனோ

 

3.         கள்ளன் கதியடைய உள்ளம் உருகினவர்

            காதல் கொள்கிறாருன்மேல் - என் மானே

            கலங்கி நில்லாதே, புலம்பி வாடாதே

            காலமே வரலாதோ

 

4.         சின்னக்கடலில் வலைவீசி மீன்பிடித்த

            செம்படவரைத் தேடி - என் மானே

            சீஷர்களாக்கி ஆதரித்தவர் பின்னே

            சொல்லொண்ணாதோ மானே

 

5.         வெட்ட வெளியில் நின்ற நெட்டை மரத்திலொரு

            குட்டயன் முகம் பார்க்க - என் மானே

            திட்டமாய் பன்னிரு சீடர்கள் சூழ

            திரள் கும்பொடு சென்ற

 

6.         கல்லறை பார்த்து வந்து கதறி அழுத மரி

            கவலையகற்றவென்ற - என் மானே

            கண்ணிமைப்பொழுதே கண்டு துயர் தவிர்த்த

            கருணாகரனென்றும்

 

7.         மானே உன்னை நான் மறந்திருப்பேனோ

            மயங்காதே சொன்னேன் - என் மானே

            மாடம் புறாவே மாதுளங்கனியே

            வந்திடுவாய் துரிதம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...