272. பியாகு ஆதி தாளம் (229)
பல்லவி
குருநாதா
நீ ஆதரி என் குண மாதாவே
தினமுன்னவா
கைகூப்பினேன் குறி
அனுபல்லவி
குருவே
சரணம் சரணம் சரணம்
1. பாவியில் பாவி சண்டாளன் நான் பாவி
உன் பட்சம் என் ரட்சண்யமே - ஆ
உன் பாதாரவிந்தம் தராதோ நற்கதி
மணிந்தேனுன் காருண்யமே - குருநாதா
2. அறிவாலும் அறியாமலும் அகவஞ்சத் துணிவாலும்
அடியேன் செய்பவமிச்சமே - இவ்
வண்டங்கொள்ளாதென்றாலுமதை எல்லா
மகற்றுமுன் புண்ய சூட்சமே - குருநாதா
3. மேசியா தாசன் பரதேசி ரத்னன் கவி
விஸ்தாரம் உன் பெருக்கே - நீ
பேசிப்பழகி நல்லாசி ஆளிக்க
பிரயாணம் உன்னூருக்கே - குருநாதா
No comments:
Post a Comment