08 June 2018

ஆண்டவர் வேதம் குறைவற்றதினால்

கைப்பிரதி:304

To Download Txt Lyrics file

 

304. சகானா                                                                      ஆதி தாளம்  (284)

 

                             பல்லவி

 

                    ஆண்டவர் வேதம் குறைவற்றதினால் ஆத்துமமுயிரடையும்

 

1.         ஆண்டவர் சாட்சி சத்தியமே அதனால் பேதையும்

            நல்ஞானி-நமதாண்டவர் கற்பனை செம்மை நல்லிதய ஆண்ட

            ஆனந்தமாகிடுமே அருளானந்தமாமே - ஆண்டவர்

 

2.         ஏகோவா கற்பனை துய்ய வெள்ளை இருட்கண் தனக்கது வெளிச்சமுமாம்

            நமதெகோவாவுக் கஞ்சுதல் பரிசுத்தம்தானே

            என்றென்றும் அதுவே நிற்கும் இன்பநிலையுள்ளதாமே - ஆண்டவர்

 

3.         ஏகோவா ஞாயங்கள் உண்மையதாகும் எல்லாம் அதுகள்

            நீதியுமாம்-பின்னும், வெகுவாம் அபரஞ்சிப் பொன்னிலும் அதுகள்

            விரும்பிடத் தக்கதுகள்; வெகு இனிமையுமாமே - ஆண்டவர்

 

4.         தேன் கூண்டொழுதல் தேனிலுமதுகள் திகட்ட மதுரமதாயிருக்கும்

            பின்னும், நானுமதடியேன் தானுமதினால் நல் எச்சரிப்படைவேன்

            இனிமை எச்சரிப்பாமே - ஆண்டவர்

 

5.         அதுகளைக் கைக்கொண்டு வருவதினால் அநேக பலனுண்டாகிறதே

            ஆகா, அதுகளால் தன் பிழை உணர்ந்தறிந்திடுவோர் ஆர் இந்தப்

            பூமியிலே; அருள் தெளிவின் கண்ணாடி - ஆண்டவர்

 

6.         மறைவாம் பாவப்பிழைகளாலடியேன் மடியாப்படிக் கதை

            விலக்கிடுமே-பின்னும், அறிவின் துணிகரப் பாவமுமென்னை

            அளாப்படிவிலக்கும்; அறிவு காட்டிய விளக்கே - ஆண்டவர்

 

7.         அப்பொழுதடியே னிருதய உண்மை அடைந்தவனாக இருப்பேனே

            பின்னும் தப்பிதம் பெரிய பாதகத்திரட்குஞ் சாய்வின்றி

            நீங்கிடுவேன்; சருவ சத்திய நிலையே - ஆண்டவர்

 

8.         என் கன்மலையும் மீட்பருமான ஏகோவாவே உமக்கு முன்

            உமக்கேற்க; இப்போ என் வாய் சொற்களும் இருதய நினைவும்

            இன்பமாயிருக்கட்டுமே; இன்ப இருதய நிலையே - ஆண்டவர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...