காணாத ஆட்டின் பின்னே

காணாத ஆட்டின் பின்னே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    காணாத ஆட்டின் பின்னே - கர்த்தர்

                        கண்ணீருடன் அலைந்தார்

                        அன்போடு உன்னை அழைக்கின்றாரே

                        இன்றே திரும்பி நீ வா

 

1.         முள்ளும் புதரும் காடும் மழையும்

            உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்

            சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்

            சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் - காணாத

 

2.         சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி

            கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்

            யோனாவைப் போல நீ போனாயல்லோ

            ஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ - காணாத

 

3.         என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்

            இயேசுவின் பாதை நீ விட்டோடாதே

            நீதி நிறைந்த தம் கரங்களை

            நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் - காணாத

 

4.         துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே

            தேவ கோபாக்கினையால் மாள்பவரே

            கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய

            கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் - காணாத

 

5.         எத்தனை நேரம் உன்னை அழைத்தார்

            இத்தனை காலம் நீ தள்ளலாமோ

            கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே

            கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா - காணாத

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு