அன்பு தேவா உம்மையல்லால்
யாரை
நான் பாடுவேன்
யாரை
நான் பாடுவேன்
சொந்தம்
என்று உம்மையல்லால்
யாரை
நான் தேடுவேன்
யாரை
நான் தேடுவேன்
1. நேற்றும் இன்றும் என்றும் மாற
அன்பினை கண்டேனே
முற்றுமாக நிந்தனைகள்
யாவும் மறந்தேனே
போற்றி உந்தன் நாமத்தை
நாளும் பாடுவேனே
வெற்றி தரும் பாதத்தை
நாளும் தேடுவேனே
2. என் தாயும் நீரே
என் தந்தையும் நீரே
தாங்கி ஏந்தி எந்தனை
சுமந்தவரே
என் சொந்தமும் நீரே
என் பந்தமும் நீரே
உந்தன் ஜீவன்
எந்தனுக்காய் ஈந்தவரே
3. என்னை பார்த்தவரே
என்னை காத்தவரே
கரம் பிடித்தென்னை
அரவணைத்தவரே
அழைத்தவரே
பரிந்துரைத்தவரே
பரத்திலே எந்தனை
சேர்ப்பவரே
No comments:
Post a Comment