கல்வாரி
சிகரமதில்
கல்நெஞ்சக்
கயவர்களால்
- 2
கருணையின்
உருவம்
கனிவான தெய்வம்
சிலுவையில்
தொங்கும்
என்
இயேசுவை பார்
என்
இயேசுவை பார்
கல்வாரி சிகரமதில்
1. தீர்ப்பிடா
என்று சொன்ன
என் இயேசுவின்
நிலைமையை
பார்!
குருதியில்
நனைந்திருக்கும்
இயேசுவின்
முகத்தினை
பார்
பிளாத்துவின்
முன்னே அநீதியின்
தீர்ப்பிலே
அமைதியில்
நிர்ப்பதை
பார்
2. பிறருக்கு
உதவி செய்த
என் இயேசுவின்
கரங்களை பார்
ஆணிகள்
துளைத்திடவே
ஆண்டவர்
துடிப்பதை
பார்
அயலானை
மன்னித்து, தந்தையின்
கரங்களில்
ஆவியை துறப்பதை
பார்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment