விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே
பதறாதே
கலங்காதே
திகையாதே விசுவாசியே
கல்வாரி
நாயகன் கைவிடாரே -2
1. கொடும்
வறுமையின் உழன்றாலும்
கடும்
பசியினில் வாடினாலும்
அன்று
எலியாவை போஷித்தவர் - இன்று
உன்
பசி ஆற்றிடாரோ - கலங்காதே
2. பெரும்
நோய்தனில் கலங்கிடாதே
பாசத்தால்
உன்னை சோதிப்பாரே
திமிர் வாதத்தால் அசைவற்றவன் - தேவ
தயவினால்
நடக்கலையோ - கலங்காதே
3. தந்தை
தாய் உன்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை
தாங்கிட்ட தேவன் உன்னை - சொந்த
கரங்களால்
அணைத்துக் கொள்வார் - கலங்காதே
4. பிறர்
வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது
சொல்லும் போது
நீ
மகிழ்ந்து களி கூறு
விண்
கைமாறு மிகுதியாகும் - கலங்காதே
5. தேவன்
கைகளும் குறுகிடாதே
தேவ
வாக்குகள் மாறிடாதே
கண்கள்
தூங்காது தினம் காத்திடும்
கர்த்தர்
ஒருபோதும் கைவிடாரே - கலங்காதே
No comments:
Post a Comment