இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச
முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன்யானும்
1. என்ன
மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில்
நினைத்தால் இன்னல் பறந்திடுமே
2. பஞ்சம்
பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்
அஞ்சிடேன்
இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்
3. வியாதியால்
எந்தனது காயங்கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை
இயேசு நாயகன் மாற்றிடுவார்
4. லோகம்
என்னை எதிர்த்துப் போவென்று சொல்லிடினும்
சோகம்
அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க
5. என்னென்ன
மாயலோகக்கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும்
பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்
6. பாவத்தால்
என்னில் வந்த சாபக்கறைகள் மாற்றி
சோபித
நீதியுடை ஆபரணமாய் ஈவார்
7. ஆசை
என் மணவாட்டி ஆக்குவேன் உன்னை எனும்
நேச
உறுதியுரை இயேசு எனக்களித்தார்
No comments:
Post a Comment