Posts

Showing posts from December, 2018

சரணம் சரணம் அனந்தா-2

சரணம் சரணம் அனந்தா 50.   (85) நீலாம்புரி                        திஸ்ர ஏகதாளம் பல்லவி                சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,             தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள்   1.          பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,             பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். - சரணம்‌ 2.          கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்             காவலன் [1] தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். - சரணம்‌ 3.          முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,             மூர்க்க மு...

சரணம் சரணம் அனந்தா-1

சரணம் சரணம் அனந்தா 49. (95) நீலாம்புரி                                திஸ்ர ஏகதாளம் பல்லவி               சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, [1]             தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள் 1.          தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே,             சென்று பல பாடுபடவும் தயவானார்.- சரணம் 2.          தந்து [2] செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்,             தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான். - சரணம் 3.          பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி,     ...

பொற்பு மிகும் வானுலகும்

காரணமேன் கோவே 48. (94) நீலாம்புரி                                           ரூபகதாளம்   தரு   சீயோன் 1          பொற்பு [1] மிகும் வானுலகும்                         பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே                         பொந்திப்பிலாத் தரண்மனையில்                         வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து           கற்பனை மீறிய பாவத்தால் ...

அப்பா தயாள குணாநந்த

அப்பா தயாள குணநந்தா மோனந்த வேதா 47. (92) நாதநமக்கிரியை                                 சாபுதாளம் கண்ணிகள் 1.           அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா             இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2.          குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்             செற்றலர் [1] எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3.          கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி             மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4.          மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர...

ஆதம்புரிந்த பாவத்தாலே

சிறை விடுத்தீரோ, பரனே   46. (34 L) சகானா                                           ஆதி தாளம் கண்ணிகள் 1.           ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி             வேதம் [1] புரிந்த சிறை விடுத்தீரோ பரனே. 2.          ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்             பாவத்துக்காகப் பழியானீரோ பரனே. 3.          வேத கற்பனையனைத்தும் மீறி நரர் புரிந்த             பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே. 4.          தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து   ...

புண்ணியன் இவர் யாரோ

புண்ணியன் இவர் யாரோ? 45. கேதாரகௌனம்                                        ஆதிதாளம் பல்லவி                    புண்ணியன் இவர் யாரோ?-வீழ்ந்து ஜெபிக்கும்                    புருஷன் சஞ்சலம் யாதோ? அனுபல்லவி            தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே,            மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்.-புண் சரணங்கள்   1.          வேளை நீங்காதோ வென்கிறார்;-கொடுமரண             வேதனை யுற்ற...

ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் 44. (91) செஞ்சுருட்டி                                               ஆதி தாளம் பல்லவி                     ஏன் இந்தப் பாடுதான்!-சுவாமி                     என்ன தருவேன் இதற் கீடுநான்? அனுபல்லவி       ஆனந்த நேமியே [1] - எனை ஆளவந்த குரு சுவாமியே   - ஏன் சரணங்கள் 1.         கெத்செமனே யிடம் ஏகவும்,-அதின்             கெழு [2] மலர்க் காவிடை போகவும்,             அச்சயனே, மனம் நோகவும்,-சொல்             அளவில்லாத் துயரமாகவும், - ஏன் 2.       ...

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

ஓசன்னா பாடுவோம் 43. சங்கராபரணம்                                          ஆதி தாளம் பல்லவி                      ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,                     உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1.          முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,             அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2.          சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்             இன்னும் என் அகத...

பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராஜா 42. யமுனா கல்யாணி                              ரூபக தாளம் பல்லவி                          பவனி செல்கின்றார் ராசா-நாம்                         பாடிப் புகழ்வோம், நேசா! அனுபல்லவி                             அவனிதனிலே மறி [1] மேல் ஏறி                         ஆனந்தம் பரமானந்தம். - பவனி சரணங்கள்   1.          எருசலேமின் பதியே [2] -சுரர்        ...

ஜகநாதா குரு பரநாதா

ஜகநாதா குருபர நாதா 41. (88, 89) சங்கராபரணம்                              ஆதிதாளம் பல்லவி                           ஜகநாதா, குரு பரநாதா, திரு                         அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! அனுபல்லவி                         திகழுறுந் [1] தாதா, புகழுறும் பாதா,                         தீதறும் வேத போதா! - செக சரணங்கள் 1.          முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர  ...