பல்லவி
பாவி
பரமசுதன் தாவி உனைத் தயவாய்
கூவி அழைக்கிறாரே பாராயோ
- ஓ
அனுபல்லவி
பூவின் பாவப் பாரத்தை மேவிச்
சுமந்து தீர்த்த
தேவாட்டுக்குட்டி இதோ பாராயோ - ஓ பாவி
சரணங்கள்
1. ஜென்மப் பாவத்தினோடு கன்மப் பாவமுமுன்னை
சின்னப் படுத்துவதைப் பார் பார் பார்
- உனின்
நன்மை ஏதுமில்லாத தன்மையதை அறிந்து
நன் மணவாளனேசைச் சேர் சேர் சேர் - ஓ பாவி
2. சிற்றொளி தீபம் சுற்றிப் பரந்து நிற்கும்
சிற்றுயிர் புட்கள் தனைப் போலவே - உனைச்
சுற்றி உலகளிக்கும் சிற்றின்பமான சுகம்
தொற்றிப் பாவி நீ சேராயோ? - ஓ பாவி
3. எத்தனை தான தர்மம் நித்தம் செய் பூசை பலி
அத்தனையாலும் பாவம் தீராதே - பரி
சுத்தன் இயேசுவின் திரு ரத்தம் பாவக் கறையை
சுத்திகரித்திடும் நீ சேராயோ? - ஓ பாவி
4. தந்தை தேவன் தமது சொந்தக் குமாரன் தனைத்
தந்து உலகில் தயை புரிந்தாரே - நீயும்
சொந்த சேயனாகவே உந்தன் விசுவாசத்தால்
சொந்தம் உண்டாகுமென்று பகர்ந்தாரே - ஓ பாவி
5. நீடிய பாவ மன்னிப்போடு மெய்ப் பரிசுத்தம்
நித்திய ஜீவனுமுன் பங்காமே - இன்பம்
நாடி ஜீவ கிரீடம் சூடிப் பராபரனைப்
பாடி மகிழ்வதும் உன் பங்காமே - ஓ பாவி
No comments:
Post a Comment