கல்வாரி மலையோரம் வாரும் பாவம் தீரும்


பல்லவி

                   கல்வாரி மலையோரம் வாரும் பாவம் தீரும்

அனுபல்லவி

            செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்கினாரே         - ஜோதி

சரணங்கள்

1.        லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
           நொம்பலப்பட வைக்க ஐயன் மேலுருண்டு
           தாகத்தினால் வாடிக்கருகியே சுருண்டு
           சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு
           சாகின்றாரே நமது நாதா ஜீவ நாதா - ஜோதி                - கல்

2.        பொன் முடி மன்னனுக்கு முண்முடியாச்சே
           உபகாரம் பரிகாரம் சிதையவுமாச்சே
           விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சே
           மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சே
           மேசையன் அப்பன் கோபம் மேலே இறங்கலாச்சே - ஜோதி        - கல்

3.        மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்குவது மேனோ
           மதுரிக்கும் திருநாவு வறண்டது மேனோ
           தளர்ந்திடாத கரங்கள் துவண்டது மேனோ
           ஜலத்தில் நடந்த பாதம் சவண்டது மேனோ
           சண்டாளர் நம்மால்தானே நம்மால்தானே - ஜோதி        - கல்

4.        ரட்சகனை மறந்தால் ரட்சண்யமில்லை
           நாமக் கிறிஸ்தவர்க்கு இரு பங்கு தொல்லை
           பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
           பரதீசில் பங்கில்லோருக்குப் பாடென்றும் தொல்லை
           பந்தயத்திலே முந்தப்பாரும் முந்தப்பாரும் - ஜோதி       - கல்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே