28 September 2018

ஓர் முறை விட்டு மும்முறை


Forsaken once and thrice denied
Derry

153                                                                           8, 8, 8, 6

1.         ஓர் முறை விட்டு மும்முறை
            சீமோன் மறுத்தும் ஆண்டவர்
            என்னிலே அன்புண்டா? என்றே
                        உயிர்த்தபின் கேட்டனர்.

2.         விஸ்வாசமின்றிக் கர்த்தரை
            பன்முறை நாமும் மறுத்தோம்;
            பயத்தினால் பலமுறை
                        நம் நேசரை விட்டோம்.

3.         சீமோனோ சேவல் கூவுங்கால்
            மனம் கசந்து அழுதான்
            பாறை போல் நின்று பாசத்தால்
                        கர்த்தாவைச் சேவித்தான்.

4.         அவன் போல் அச்சங்கொள்ளினும்,
            நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்;
            பாவத்தால் வெட்கம் அடைந்தும்
                        கண்ணீர் சொரிந்திலோம்.

5.         நாங்களும் உம்மை விட்டுமே
            பன்முறை மறுதலித்தும்
            நீர் எம்மைப் பார்த்து இயேசுவே
                        நெஞ்சுருகச் செய்யும்.

6.         இடறும் வேளை தாங்கிடும்;
            உம்மைச் சேவிக்கும் கைகளும்
            உம்மை நேசிக்கும் நெஞ்சமும்
                        அடியார்க்கருளும்.

ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்


O what the joy and the glory must be
O quanta qualla

402                                                                            10, 10, 10, 10

1.         ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
            பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?
            வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்;
            ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.

2.         ராஜ சிங்காசன மாட்சிமையும்
            ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
            இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
            அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?

3.         மெய் சமாதானத் தரிசனமாம்
            அக்கரை எருசலேம் என்போம் நாம்
            ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
            வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.

4.         சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
            தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?
            பேரருள் ஈந்திடும் ஆண்டவா, நீர்
            பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.

5.         ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,
            விடிதல் முடிதல் இல்லாததாம்;
            தூதரும் பக்தரும் ஓயாமலே
            ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே.

6.         பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
            மீண்டு, நம் தேசம் போய்ச் சேரும்வரை,
            எருசலேமை நாம் இப்பொழுதும்
            வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.

7.         தந்தையினாலும், குமாரனிலும்
            ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;
            திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
            சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.

ஓசன்னா பாலர் பாடும்


All glory laud and honour
St. Theodulph

92                                                        7, 6, 7, 6 with refrain

                       ஓசன்னா பாலர் பாடும்
                             ராஜாவாம் மீட்பர்க்கே
                        மகிமை, புகழ், கீர்த்தி
                                    எல்லாம் உண்டாகவே

1.         கர்த்தாவின் நாமத்தாலே
                        வருங் கோமானே, நீர்
            தாவீதின் ராஜ மைந்தன்,
                        துதிக்கப்படுவீர்.

2.         உன்னத தூதர் சேனை
                        விண்ணில் புகழுவார்;
            மாந்தர், படைப்பு யாவும்
                        இசைந்து போற்றுவார்.

3.         உம்முன்னே குருத்தோலை
                        கொண்டேகினார் போலும்,
            மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்
                        கொண்டும்மைச் சேவிப்போம்

4.         நீர் பாடுபடுமுன்னே
                        பாடினார் யூதரும்;
            உயர்த்தப்பட்ட உம்மைத்
                        துதிப்போம் நாங்களும்.

5.         அப்பாட்டைக் கேட்டவண்ணம்
                        எம் வேண்டல் கேளுமே;
            நீர் நன்மையால் நிறைந்த
                        காருணிய வேந்தரே.

ஓ பெத்லகேமே சிற்றூரே


O Little town of Bethlehem
Forest Green,   Christmas Carol

60                                                                                            D.C.M.

1.         ஓ பெத்லகேமே சிற்றூரே,
                        என்னே உன் அமைதி!
            அயர்ந்தே நித்திரை செய்கையில்
                        ஊர்ந்திடும் வான் வெள்ளி.
            விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
                        உன் வீதியில் இன்றே;
            நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
                        உன் பாலன் இயேசுவே.

2.         கூறும், ஓ விடி வெள்ளிகாள்!
                        இம்மைந்தன் ஜன்மமே;
            விண் வேந்தர்க்கு மகிமையே,
                        பாரில் அமைதியாம்
            மா திவ்விய பாலன் தோன்றினார்
                        மண் மாந்தர் தூக்கத்தில்,
            விழித்திருக்க தூதரும்
                        அன்போடு வானத்தில்.

3.         அமைதியாய் அமைதியாய்
                        விண் ஈவு தோன்றினார்;
            மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
                        அமைதியால் ஈவார்;
            கேளாதே அவர் வருகை
                        இப்பாவ லோகத்தில்;
            மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
                        தம் சாந்த ஆன்மாவில்.

4.         வேண்ட நற் சிறு பாலரும்
                        இத்தூய பாலனை,
            அழைக்க ஏழை மாந்தரும்
                        இக்கன்னி மைந்தனை,
            விஸ்வாசமும் நம் பாசமும்
                        வரவைப் பார்க்கவே,
            இராவை நீக்கித் தோன்றுவார்
                        இம்மாட்சி பாலனே.

5.         பெத்லெகேம் தூய பாலனே,
                        இறங்கி வருவீர்;
            ஜனிப்பீர் எங்களில் இன்றும்
                        எம் பாவம் நீக்குவீர்;
            நற்செய்தி இவ்விழாதன்னில்
                        இசைப்பார் தூதரே;
            ஆ வாரும், வந்து தங்கிடும்
                        இம்மானுவேலரே.

ஓ எருசலேமியாரே


Wake O wake for night is flying
Wachet auf

397                                                 8, 9, 8, 8, 9, 8, 6, 6, 4, 8, 8

1.                 ஓ, எருசலேமியாரே,
            விழியுங்கள்; மெய் மார்க்கத்தாரே,
                        இப்பாதி ராத்திரியிலே
                        பர்த்தா வாறார்; வேகமாக
            எழுந்திருங்கள்; புத்தியாக
                        இருக்கும் கன்னிகள் எங்கே?
                        தீவர்த்திகளையே
            எடுத்தெதிர்கொண்டே
                                    போம் நேரமாம்,
                        என்றிரவில் அலங்கத்தில்
                        நிற்பாரின் கூக்குரல் உண்டாம்.

2.                     சீயோனாகிய மனைவி
            சந்தோஷம் மனதில் பரவி
                        விழித்தெழுந்திருக்கிறாள்;
                        அவள் நேசர் மேன்மையோடும்
            சிநேகத்தோடும் தயவோடும்
                        வெளிப்படுகிறதினால்
                        கிலேசம் நீங்கிற்று;
            ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா!
                        அடியாரும் கம்பீரிக்கும்
                        கதிக்குச் செல்வோமே, கர்த்தா.

3.                     சுரமண்டலங்களாலும்,
            நரர் சுரர்கள் நாவினாலும்,
                        துதிக்கப்பட்டோர் தேவரீர்;
                        மோட்சலோகம் மா சிறப்பு,
            நீர் எங்களை வானோர்களுக்கு
                        ஒப்பானோராக மாற்றுவீர்
                        அவ்வாழ்வைக் கண்டோர் ஆர்?
            காதாலே கேட்டோர் ஆர்?
                                    நாங்கள் மகா
                        சந்தோஷமும் மகிழ்ச்சியும்
                        அடைகிறோம்; அல்லேலூயா!

ஒன்றே தேவை என்றுரைத்தீர்


Mins is noth sch Herr dies Eixe
Bavarian 43

341                                                     8, 7, 8, 7, 12, 12, 11, 11

1.         ஒன்றே தேவை என்றுரைத்தீர்,
                        ஸ்வாமி, அதை நாடுவேன்;
            என்னை உம்மண்டைக்கழைத்தீர்,
                        மாங்கையை அரோசிப்பேன்;
            நான் உலகை எத்தனை தழுவினாலும்
            பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும்
            அனைத்தும் அபத்தம், ஒன்றானதை நான்
            அடைந்தால், நான் பூரண பாக்கியவான்.

2.         இதைச் சிஷ்டிகளிடத்தில்
                        தேடினால், கிடையாதே;
            இயேசு ஸ்வாமியின் வசத்தில்
                        வாழ்வெல்லாம் இருக்குமே;
            என் ஆத்துமமே, உன் இக்கட்டுக்கு சாவும்
            இம்மானுவேலே பரிபூரணம் யாவும்,
            அகப்படப்பண்ணுவர், அவரை நீ
            உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.

3.         இந்தப் பங்கையே மரியாள்
                        தனக்குத் தெரிந்தாளே;
            வாஞ்சையாகிய பசியால்
                        கிறிஸ்தின் பாதத்தண்டையே
            இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக
            மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
            சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
            அடைந்ததால், மனத்தில் பூரித்தாளே.

4.         நானும் அந்த வாஞ்சையோடே
                        உம்மையே, என் இயேசுவே,
            அண்டிக்கொண்டேன்; நீர் என்னோடே
                        ஐக்கியமாகும், ஜீவனே,
            பெரும் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,
            நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
            தொடருவேன்; உமக்குள் யாவும் உண்டே.
            நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.

5.         இப்போ பூரணக் களிப்பு
                        என் நெஞ்சை நிரப்பிற்று;
            நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
                        என்னைத் திருப்தி யாக்கிற்று.
            உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும்
            நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும்
            சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்,
            சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன்.

6.         ஆகையாலே நான் தெரிந்து,
                        பற்றும் பேறெல்லாம் நீரே;
            என்னை நீர் ஆராய்ந்தறிந்து
                        உண்மையாக்கும், இயேசுவே;
            நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்,
            என் கால்களை மோட்ச வழியிலே காரும்;
            நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டே
            இருக்குவும்; மற்றது குப்பையாமே.

ஒழிந்ததே இப்பூவினில்


In Christ there is no East or West
St. Bernard

234                                                                                  C.M.

1.       ஒழிந்ததே இப்பூவினில்
                        எவ்வித்தியாசமாம்;
            செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
                        சபை ஒன்றே ஒன்றாம்.

2.         மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
                        மா ஐக்கியம் ஒன்றியே,
            செய் சேவை சேர்க்கும் மாந்தரை
                        பொற் கயிற்றாலுமே

3.         வாருமே, கைகோருமே, சபையில்
                        எம்மனுமக்களே;
            ஒரே பிதாவை சேவிக்கும்
                        யாவரும் ஒன்றாமே.

4.         சேர்ந்தனரே இப்பூவினில்
                        பற்பல ஜாதியாம்
            மாந்தர் யாரும் கிறிஸ்துவில்;
                        சபை ஒன்றே ஒன்றாம்

ஒப்பில்லாத திவ்விய அன்பே


Love Divine all loves excelling
SS 242

361                                                     8, 7, 8, 7 D.

1.         ஒப்பில்லாத திவ்விய அன்பே,
                        மோட்சானந்தா, தேவரீர்
            எங்கள் நெஞ்சில் வாசம் செய்தே
                        அருள் பூர்த்தியாக்குவீர்.
            மா தயாள இயேசு நாதா,
                        அன்பு மயமான நீர்,
            நைந்த உள்ளத்தில் இறங்கி
                        உம் ரட்சிப்பால் சந்திப்பீர்.

2.         உமது நல் ஆவி தாரும்,
                        எங்கள் நெஞ்சு பூரிப்பாய்
            உம்மில் சார நீரே வாரும்,
                        சுத்த அன்பின் வடிவாய்;
            பாவ ஆசை எல்லாம் நீக்கி
                        அடியாரை ரட்சியும்;
            விசுவாசத்தைத் துவக்கி
                        முடிப்பவராய் இரும்.

3.         வல்ல நாதா எங்கள் பேரில்
                        மீட்பின் அன்பை ஊற்றுமே;
            விரைவாய் உம் ஆலயத்தில்
                        வந்து என்றும் தங்குமே.
            வானோர் போல நாங்கள் உம்மை
                        நித்தம் வாழ்த்திச் சேவிப்போம்;
            ஓய்வில்லாமல் உமதன்பைப்
                        பூரிப்பாய்க் கொண்டாடுவோம்.

4.         உந்தன் புது சிஷ்டிப்பையும்
                        சுத்த தூய்மையாக்குமேன்;
            உந்தன் திவ்விய ரசிப்பையும்
                        பூரணப்படுத்துமேன்;
            எங்கள் கிரீடம் உம்முன் வைத்து
                        அன்பில் மூழ்கிப் போற்றியும்,
            மேன்மை மேலே மேன்மை பெற்று
                        விண்ணில் வாழச் செய்திடும்.

ஒப்பில்லா திரு இரா


Silent Night Holy Night
Christmas Caral

59                   

1.         ஒப்பில்லா - திரு இரா!
            இதில் தான் மா பிதா
            ஏக மைந்தனை லோகத்துக்கு
            மீட்பராக அனுப்பினது
            அன்பின் அதிசயமாம்-
            அன்பின் அதிசயமாம்!

2.         ஒப்பில்லா - திரு இரா!
            யாவையும் ஆளும் மா
            தெய்வ மைந்தனார் பாவிகளை
            மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
            எத்தனை தாழ்த்துகிறார்-
            எத்தனை தாழ்த்துகிறார்!

3.         ஒப்பில்லா - திரு இரா!
            ஜென்மித்தார் மேசியா;
            தெய்வ தூதரின் சேனைகளை
            நாமும் சேர்ந்து, பராபரனை
            பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்-
            பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!

27 September 2018

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்



இதைப்பாடிய கவிராய வித்வானும் தேசபக்தனுமாகிய சுப்பிரமணிய பாரதி ஓர் இந்துவாயினும் எவ்வளவு அருமையாய் கிறிஸ்துவையும் மகதலேனா மரியாளையுங் குறித்துப் பாடியிருக்கிறார்! இவர் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் புதிதாய் மொழிபெயர்க்கவும் எண்ணியிருந்தாராம்.  ஆனால் 1921-ஆம் ஆண்டு மரணமாகிவிட்டார்.  பிறந்தது 1882.

1.       'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
            எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
            நேச மா மரியா மக்தலேனா
            நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்'.
            தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
            தேவர் வந்து நமக்குட் புகுந்தே
            நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
            நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,

2.         அன்பு காண் மரியா மக்தலேனா,
            ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
            முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
            மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
            பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
            போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
            அன்பெனும் மரியா மக்தலே னா.
            ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-

3.         உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
            உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்
            வண்மைப் பேருயிர் - யேசு கிறிஸ்து
            வான மேனியில் அங்கு விளங்கும்.
            பெண்மை காண் மரியா மக்தலே னா,
            பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
            நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
            நொடியி லிஃது பயின்றிட லாகும்.

சி. சுப்பிரமணிய பாரதியார்.






ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...