சிலுவையைப் பார்க்கும் பார்வை என்ன?
சிந்திக்கச்
சொல்லும் செய்திதான் என்ன? - 2
உலகின்
மானிடர் மீட்பரினிடமே
உலக
இரட்சகரின் குருதி சிந்தி
ஈன
சிலுவையும் சுத்தம் ஆனதே
புனித
சின்னமாய் ஆகிப் போனதே
1. அன்பும்
கருணையும் நிறைந்த சிலுவை
தியாக
உருவம் சுமந்த சிலுவை - 2
கடவுள்
மனிதன் பகையைத் தீர்த்து
ஒப்புரவாக
உயர்ந்த சிலுவை - 2 - சிலுவையைப்
2. ஆத்தும
மரணம் நிச்சயம் என்ற
நிலையை
மாற்ற நிமிர்ந்த சிலுவை - 2
குற்றமில்லா
இரத்தம் வடிந்த சுவடால்
குவலயம்
(உலகம்) வாழ நின்ற சிலுவை - 2 - சிலுவையைப்
3. நியாயத்
தீர்ப்பு நாட்களில் மானிடர்
சிலுவையில்
அடிக்கப்படாமல் இருக்க - 2
ஆண்டவர்
இயேசு தம்மைத் தானே
பலியாய்
தந்து காத்த சிலுவை - 2 - சிலுவையைப்
- Eva. Dr. C. Victor
No comments:
Post a Comment