402.
இராகம்: நாட்டை ஆதி
தாளம்
கண்ணிகள்
1. அன்புடன் எங்களை ஆண்டருளும் தேவா
அனைவரும் உம்பாதம்
போற்றுகின்றோம்;
இன்பமுக
வொளி எங்கள் அகம் வீச
எழுந்தருள்வாய்
யேசு பெருமானே.
2. வேரினில்
ஊன்றியே விளங்கவுன் சாரத்தை
விரைவுடன்
வேதனே[1] கனிந்திடுவாய்;
தாரணியில்
வீழா தங்கும் ஜீவதருவாய்
தழைத்திடவே
செய்வாய் தயாபரனே!
3. மலர்ந்த
நல்லுள்ளமும் மணங்கமழ் வாழ்க்கையும்
மறையவனே
தந்து வசித்திடுவாய்;
அலைந்தவர்கள்
வந்து அதிசயத் தேனுண்டு
அகமகிழ
நாளும் அலங்கரிப்பாய்.
- ஒய். ஆமோஸ்
No comments:
Post a Comment