அன்பு கூர்ந்த
என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் - 2
வேதனை
துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும்
பிரிக்க முடியாது - 2
கிறிஸ்துவின்
அன்பிலிருந்து - (2)
1. எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்? - 2
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா! - 2 - வேதனை
2. தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும்? - 2
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! - 2
- வேதனை
3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே - 2
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார் - 2 - வேதனை
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment