1. அன்பே
என் ஆருயிரே என் கல்வாரி நாயகரே
ஆசாரியனாய் நான் வந்தேனையா
பலி செலுத்த வந்தேனையா
சரணம் சரணம் ஐயா 3 - உம் பாதம் சரணம்
ஐயா
2. கல்வாரி சிலுவையாமே
வெண்கல பலிபீடமே
நேசரே ஆட்டுக்குட்டி அவர்
இரத்தத்தை தொழுதிடுவோம் - சரணம்
3. ஜீவ ஆவியானவரே
என்னைக் கழுவும் தண்ணீர் தொட்டி
என்னை ஆவியில் சுத்தமாக்கி
பரிசுத்த ஸ்தலத்தில் புகுவேன் - சரணம்
4. பரிசுத்த ஆவியானவர்
நீரே எரியும் குத்து விளக்கே
உம்மை வாழ்த்தி வரவேற்கிறேன்
என் இதய ஆசனத்தில் - சரணம்
5. உம் தேவ சமூகத்திலே
சூடான அப்பங்கள் உண்டே
உந்தன் அப்பமாம் வசனத்தாலே
என்னை திருப்தியாக்குமையா - சரணம்
6. தூப பலிபீடத்தின் முன்
நான் ஆவியில் தொழுதிடுவேன்
புதுப் பாடல்கள் பாடிடுவேன்
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் - சரணம்
7. திரையும் விலகியதே
கிருபாசனத்தின் முன் நிற்கிறேன்
சாட்சி பெட்டியாம் கிறிஸ்து மூலம்
விண்ணப்பங்களை ஏறெடுப்பேன் - சரணம்
No comments:
Post a Comment